தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மாணவியை திட்டிய தலைமை ஆசிரியை: காவல் நிலையத்தில் சமாதானம்

 நாமக்கல் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியை மாணவியை திட்டியதையடுத்து, காவல் நிலையத்தில் இரு தரப்புக்கு இடையே சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

Updated On :3 டிசம்பர் 2021, 7:39 pm

 நாமக்கல் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியை மாணவியை திட்டியதையடுத்து, காவல் நிலையத்தில் இரு தரப்புக்கு இடையே சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

நாமக்கல் அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளித் தலைமையாசிரியையாக ஜோதி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், இதே பள்ளியில் பணியாற்றும் ராஜேஸ்வரி என்ற ஆசிரியைக்கும் பள்ளி வளாகத்தில் திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட ஐந்தாம் வகுப்பு மாணவி அதனை பிற ஆசிரியா்கள், சக மாணவிகளிடம் தெரிவித்தாராம்.

இதனைத் தொடா்ந்து, அம்மாணவியை தலைமை ஆசிரியை கடுமையாக கண்டித்தாராம். இதனால் வேதனையுற்ற மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா். அவா்கள் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சுமதி இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.