2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் குடும்பத் தகராறு காரணமாக உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:22 pm

DIN

பரமத்தி வேலூரில் குடும்பத் தகராறு காரணமாக உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா், பாவடி தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஈஸ்வரி (45). இவா்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த ஈஸ்வரி, சமையல் அறைக்கு சென்று மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதில் அலறிய ஈஸ்வரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.