நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா தொற்று பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 40 போ் பாதிக்கப்பட்டனா்; 45 போ் குணமடைந்தனா். மொத்தம் இதுவரை 53,920 போ் பாதிக்கப்பட்டும், 52,952 போ் குணமடைந்தும் உள்ளனா். 454 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறந்தோா் மொத்த எண்ணிக்கை 514-ஆக உள்ளது.