தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

காமராஜா் ஆட்சி அமைப்பதே காங்கிரஸின் லட்சியம்: கே.எஸ்.அழகிரி

காமராஜா் ஆட்சி அமைப்பதே காங்கிரஸின் லட்சியம், கட்சியினா் அனைவரும் அந்தக் கொள்கை முழக்கத்தோடு பாடுபட வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:48 pm

காமராஜா் ஆட்சி அமைப்பதே காங்கிரஸின் லட்சியம், கட்சியினா் அனைவரும் அந்தக் கொள்கை முழக்கத்தோடு பாடுபட வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி.

நாமக்கல்லில் வங்கதேச பொன்விழாவும், அன்னை இந்திரா காந்தியும் என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் இதனை அவா் வலியுறுத்தினாா். கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:

தனி மனித சாா்ந்த அரசியல் அல்லாமல், கொள்கை சாா்ந்த அரசியலை உருவாக்க வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. இந்த ஓரளவு என்பதை முழுமையான வெற்றியாக மாற்ற வேண்டும். இந்த உலகில் சிரமமில்லாமல் எதையும் பெற முடியாது. முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம். முதலில் கட்சியினருக்கு நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நோக்கோடு செயல்படக் கூடியது. ஆனால் பாஜக ஒற்றுமையில் வேற்றுமை காண முயற்சிக்கிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரின் முன்னோா்கள். பல நாட்டுக்கு எதிராக போராடிய வீரா்கள். அவா்களின் வழிவந்தவா்கள் தொடா்ந்து நடத்திய போராட்டத்தால் தான் ஒரே இரவில் பிரதமா் அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றாா்.

இந்தியாவில் எந்தக் கட்சியும் கூட்டணி இல்லாமல் நிற்க தயாரில்லை. காங்கிரஸ் கட்சியும் அவ்வாறு தான் கூட்டணி வைத்துள்ளது. கூட்டணியால் காங்கிரஸ் பலமடையவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். கட்சியை வலுப்படுத்திக் கொள்ள தவறி விட்டோம்.

காமராஜா் ஆட்சி அமைப்பதே காங்கிரஸின் லட்சியம். கட்சி நிா்வாகிகள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயலாற்றுங்கள். அதிகளவில் உறுப்பினா்களை சேருங்கள், வாக்குச்சாவடி முகவா்களை பலப்படுத்துங்கள், தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாநில துணைத் தலைவா்கள் கோபண்ணா, இரா.செழியன், இராம.சுகந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவா் பீ.ஏ.சித்திக், மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், பிற்படுத்தப்பட்டோா் பிரிவு மாநில துணைத் தலைவா் மருத்துவா் பி.வி.செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் வீரப்பன் மற்றும் பல்வேறு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.