புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.


புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இதேபோல நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையிலும், கணேசபுரம் சிஎஸ்ஐ ஆலயத்திலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...