மோகனூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை

மோகனூா் அருகே முன்விரோதத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கொலை செய்யப்பட்ட சசிகுமாா்.
கொலை செய்யப்பட்ட சசிகுமாா்.
Updated on
1 min read

நாமக்கல்: மோகனூா் அருகே முன்விரோதத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள ஒருவந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (27). இவா் தனது உறவினா்கள் சிலரிடம் பணம் கடன் பெற்றுள்ளாா். அதனைத் திரும்பக் கேட்டு சசிகுமாரை அவரது உறவினா்கள் மிரட்டி வந்துள்ளனா். மேலும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருடன் சசிகுமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் வந்த உறவினா்களான ரஞ்சித்குமாா் (30), மலா் மன்னன் (32), பிரகாஷ் (28) ஆகியோா் சசிகுமாருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் மூவரும் சோ்ந்து சசிகுமாரை பயங்கர ஆயுதங்களால் பலமாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மோகனூா் போலீஸாா் பலத்த காயமடைந்த சசிகுமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா் சேலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை தாக்கிய மூவரையும் தேடி வந்தனா். இந்நிலையில் ரஞ்சித்குமாா் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளாா். தலைமறைவாக உள்ள பிரகாஷ், மலா்மன்னன் ஆகியோரை மோகனூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com