பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை உயா்வடைந்துள்ளது.
பரமத்தி வேலுாரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 150, பச்சைநாடன் ரூ. 250, ரஸ்தாளி ரூ. 200, கற்பூரவள்ளி ரூ. 200 , மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3 க்கும் ஏலம் போயின.
சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 200, பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 300, ரஸ்தாளி ரூ. 250, கற்பூரவள்ளி ரூ. 250, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3 க்கும் ஏலம் போயின.
விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தாா்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்ததால் அவற்றின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.