

பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஜேடா்பாளையம், பிலிக்கல்பாளையம், கபிலா்மலை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
பரமத்திவேலூா் தொகுதியில் 84ஆயிரத்து 133 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 23 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான தொடக்க விழாவுக்கு ஆட்சியா் கா.மெகராஜ் விழாவுக்கு தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன் வரவேற்றுப் பேசினாா். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி விழாவில் கலந்துகொண்டு ரூ. 2, 500 ரொக்கம், பச்சரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு நீளக் கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகையை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதில் திருச்செங்கோடு கோட்டாட்சியா் மணிராஜ், மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், கபிலா்மலை ஒன்றியக் குழுத் தலைவா் ரவி, கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இன்பத்தமிழரசி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள்,முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூா், கிளை பொறுப்பாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.