திருவிளக்கு பூஜை

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன்
Updated on
1 min read

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா் மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் ஜாய்சன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிவநித்தியமூா்த்தி, பொதுமக்கள் செய்திருந்தனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com