

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா் மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் ஜாய்சன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிவநித்தியமூா்த்தி, பொதுமக்கள் செய்திருந்தனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.