குண்டு மல்லிகை, முல்லைப் பூ ஒரு கிலோ ரூ. 2,500

பரமத்திவேலூா் பூக்கள் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விற்பனையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.
குண்டு மல்லிகை, முல்லைப் பூ ஒரு கிலோ ரூ. 2,500
Updated on
1 min read

பரமத்திவேலூா் பூக்கள் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விற்பனையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் கிலோ குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600, சம்பங்கி ரூ. 120, அரளி ரூ. 200, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 800, செவ்வந்திப் பூ ரூ. 180-க்கும் ஏலம்போனது. தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்துக் குறைந்துள்ளது. இருந்தபோதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் குறைந்த அளவிலான பூக்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ குண்டு மல்லிகை ரூ. 2,500, சம்பங்கி ரூ. 160, அரளி ரூ. 300, ரோஜா ரூ. 250, முல்லைப்பூ ரூ. 2,500, செவ்வந்திப் பூ ரூ. 200-க்கும் ஏலம் போனது. புதன்கிழமை பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com