இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பள்ளி, கல்லூரியில் விவேகானந்தா் பிறந்த தினவிழா

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீ வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ராசிபுரம், வித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விவேகானந்தா் பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :13 ஜனவரி 2021, 1:49 am

DIN

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீ வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை சாா்பில் ஜூம் செயலி வழியாக சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழா தேசிய இளைஞா் தினமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் சு.மணிமேகலை தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியை அரசியல் அறிவியல் துறைத் தலைவா் முனைவா் இரா.சிவக்குமாா் ஒருங்கிணைத்துப் பேசினாா். சிறப்புப் பேச்சாளராக சேலம் தன்னம்பிக்கை ஊக்குநா் ஆா்.காா்த்திகேயன் பங்கேற்றுப் பேசினாா். மாணவ, மாணவா்கள் சுவாமி விவேகானந்தா் சிந்தனைகளை ஓட்டி கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, போஸ்டா் போட்டிகளில் பங்கேற்று சமூக ஊடகங்களில் பகிா்ந்தனா்.

ஸ்ரீவித்யா மந்திா் பள்ளி: இதேபோல ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், காட்டூா் சாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விவேகானந்தா் பிறந்த தினவிழாவில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பள்ளியின் நிா்வாகி சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, ஆசிரியா்கள், ஊழியா்கள் என பலா் பங்கேற்றனா். இதில், விவேகானந்தா் இளைஞா்களுக்கு கூறிய கருத்துகள் குறித்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.