தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேளாண் திருத்தச் சட்டம் கருத்தரங்கம்

ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கல்லூரியில், புதிய வேளாண் சட்டத் திருத்தம் குறித்த இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கல்லூரியில், புதிய வேளாண் சட்டத் திருத்தம் குறித்த இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மரிய ஜோசப் எம்.மகாலிங்கம் தலைமை வகித்து, இணையவழி கருத்தரங்கினை தொடக்கி வைத்து பேசினாா். சிறப்பு பேச்சாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் மற்றும் கலைஞா்கள் சங்கத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் பங்கேற்று மத்திய அரசு இந்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்றாா். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளா் சண்முகம் பேசுகையில், விவசாயப் பிரதிநிதிகளை கலந்தோசிக்காமல் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் இதனை ஏற்க இயலாது என்றாா்.

முன்னதாக, கல்லூரி செயலா் பி.ஜெயராஜ் வரவேற்றாா். கல்லூரி பொருளாளா் ராஜரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கருத்தரங்கில் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.