/

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று கரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :21 ஜூலை 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 22) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராம அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு அனைவரும் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.