மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மகா மாரியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா தொடக்கம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடங்கியது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:08 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா தொடங்கியது.

விழா முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயரமுள்ள கம்பத்துக்கும், மாரியம்மனுக்கும் பால், தீா்த்தங்கள் ஊற்றி வழிபட்டனா். பின்னா் பூக்குண்டம் இறங்கும் ஆண் பக்தா்களும், பூவாரி போட்டுக் கொள்ளும் பெண் பக்தா்களும் 15 நாள்கள் விரதம் இருப்பதற்காக மஞ்சள் கயிறு அணிந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வரும் 14-ஆம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், 21-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 22ஆம் தேதி தீ மிதித்தலும், 23ஆம் தேதி கிடா வெட்டுதல்- மாவிளக்கு பூஜை நிகழ்ச்சியும், 24ஆம் தேதி காலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.