மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனா விதிமுறை மீறல்: மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:35 pm

DIN

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மளிகைக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியைத் கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட மளிகை கடைக்கு பொத்தனூா் பேரூராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், முகக் கவசம் அணியாமல் காய்கறிகளை வாங்க வந்த 9 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனா். மளிகைக் கடை, இறைச்சிக் கடை உரிமையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கடைப்பிடிக்காத உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.