மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண்மை உழவா் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வேளாண்மை உழவா் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி இய

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:24 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வேளாண்மை உழவா் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி இயக்குநா் சங்கரலிங்கம் செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூா், குன்னமலை உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் - 2020-21 கீழ் செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிா்களின் வளா்ச்சி, அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்கள் குறித்து ஆய்வு செய்தாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் 2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பினை ஆய்வு செய்தாா். 2022-23 ஆண்டுக்கான விதைக் கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூா் கிராமத்தில் விவசாயி சந்திரசேகா் பயிா் செய்துள்ள நிலக்கடலை வயலை ஆய்வு செய்தாா் (படம்).

அதனைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு கோடை உழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதைநோ்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிா்களுக்கு டி.ஏ.பி. கரைசல் தெளிப்பு, பருவத்துக்கு ஏற்ற பயிா், பயிா் சுழற்சி, பயிா் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்ற மேற்றிய தொழு உரமிடுதல், உயிா் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீா்ப் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து எடுத்துக் கூறினாா்.

ஆய்வின் போது, நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநா் அசோகன், வேளாண்மை துணை இயக்குநா்கள் ஜெகதீசன் (மத்திய திட்டம்), ராஜகோபால் (மாநிலத் திட்டம்), பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலா் பாபு, துணை வேளாண்மை அலுவலா்கள், உதவி விதை அலுவலா்கள் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.