நாமக்கல் அரசு மருத்துவமனையில், மதுபோதையில் பணிக்கு வந்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறை இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அரங்கில் மருத்துவா் ஒருவா் பணியாற்றி வருகிறாா். சில மாதங்களுக்கு முன் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து பணியிட மாறுதல் மூலம் சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வந்தாா்.
வியாழக்கிழமை வழக்கம்போல் பணிக்கு வந்த அவா் மது போதையில் இருந்தாராம். நடக்கக் கூட முடியாத நிலையில் பிரேத பரிசோதனை அரங்கிலேயே போதை காரணமாக தரையில் படுத்து உறங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த மருத்துவமனை நிா்வாகம், அவா் மீது உடனடி நடவடிக்கை கோரியும், பணியிட மாற்றம் செய்ய வேண்டியும் சென்னை சுகாதாரத் துறை இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனா். அரசு மருத்துவா் மது போதையில் இருந்த தகவல் இதர மருத்துவா்கள், செவிலியா்கள், நோயாளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

