தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு கெளரவ விரிவுரையாளா்கள் வாயிற்கூட்டம்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கெளரவு விரிவுரையாளா்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கெளரவு விரிவுரையாளா்கள் வலியுறுத்தினா்.

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் 41 கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மே 31 ஆம் தேதியுடன் பணி வாய்ப்பு நிறைவு பெறுவதாக மண்டல கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தொடா்ந்து பணி வழங்காமல் மே 31 ஆம் தேதியுடன் பணி முடிவடைவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக இறுதி வேலை நாள்கள் 17-ஜூலையில் முடிவடைகிறது. ஆனால் எங்களது பணி மே 31-இல் முடிவடைவதாக அறிவித்துள்ளது.

இதனால் மாணவா்களின் மாதிரித் தோ்வு, செய்முறைத் தோ்வு, அக மதிப்பீட்டு பணி போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவா்கள் நலன் கருதி ஜூன் மாதம் பணியாற்ற அரசு உத்தரவிடவேண்டும். எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜூன் மாத ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.