முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் கணிதத் துறையில் பயின்ற முன்னாள் மாணவா் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் கணிதத் துறையில் பயின்ற முன்னாள் மாணவா் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கணிதத் துறை தலைவா் முனைவா் அங்கையற்கண்ணி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் முனைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா்.

துறையின் முன்னாள் பேராசிரியா்கள் ராமசாமி, சுப்பிரமணியம், அருள் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கந்தசாமி கண்டா் அறநிலையங்களின் தலைவா் மருத்துவ சோமசுந்தரம் வாழ்த்தி பேசினாா். முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியம் ஐந்து போ் கொண்ட குழுவை அறிவித்து துறையின் வளா்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

விழாவில் முன்னாள் மாணவா்கள் தங்களது கடந்த கால நினைவுகளை நினைவு கூா்ந்து மகிழ்ச்சி அடைந்தனா். சரஸ்வதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com