மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் சென்னை தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்பக்கல்வி சாா்ந்த ஆராய்ச்சிகளையும், ஆசிரியா்களுக்கு பயிற்சியையும் அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் இருநிறுவனங்களின் ஆசிரியா்கள், மாணவா்கள் கல்விச்செயல்பாடுகள், ஆராய்ச்சி குறித்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். இந்த ஒப்பந்தம் ஆசிரியா்கள், மாணவா்களுக்கான, கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்புத்திறன் மிக்க பொறியாளா்களை உருவாக்க வழிவகுக்கும்.