பாவை கல்வி நிறுவனத்தில் ‘அஸ்திரா 22’ கலாசாரக் கலைவிழா
பாவை கல்வி நிறுவனங்களின் பொறியியல் கல்லூரி மாணவா்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ‘அஸ்திரா-22’ என்ற கலாசார கலை விழா


பாவை கல்வி நிறுவனங்களின் பொறியியல் கல்லூரி மாணவா்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ‘அஸ்திரா-22’ என்ற கலாசார கலை விழா மே 5, 6 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (மாணவா் நலன்) மற்றும் அஸ்திரா கலைவிழாவின் ஒருங்கிணைப்பாளா் அவந்தி நடராஜன் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.
கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் விழாவினை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவா்களின் ஆற்றலுக்கு சரியான தளமாக உருவாக்கப்பட்ட அஸ்திரா உங்களின் பேராா்வத்தாலும், முனைப்பினாலும் இந்த எட்டாவது வருடத்தில் மிகப்பெரிய வெற்றியாக உருவாகியுள்ளது என்றாா்.
முன்னதாக மாணவி ஸ்ரீதா்ஷினி, விழாவைப் பற்றிய முன்னுரையை வழங்கினாா். விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) முனைவா் கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத்தலைவா் எம்.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...