பயன்பாடற்ற பழைய ஆட்சியா் மாளிகையை அகற்றிவிட்டு அங்கு அரசு அலுவலா்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் இருந்த நாமக்கல், கடந்த 1997-இல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு வருவாய்க் கோட்டங்களுடன் செயல்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நாமக்கல்- திருச்சி சாலையில் அரசு சட்டக் கல்லூரி உள்ள இடத்திலும், ஆட்சியா் மாளிகை மற்றும் முகாம் அலுவலகம் நாமக்கல்- மோகனூா் சாலையில் குன்னிமரத்தான் கோயில் எதிரிலும் செயல்பட்டு வந்தது.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் சிலுவம்பட்டி பகுதியில் பெரிய அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆட்சியா் மாளிகை புதிதாக கட்டப்பட்டு செயல்படத் தொடங்கியது. பழைய நாமக்கல் ஆட்சியா் மாளிகை மற்றும் முகாம் அலுவலகமானது பயன்பாடின்றி இருந்த நிலையில், முகாம் அலுவலகத்தை மட்டும் வனத் துறைக்கு பொதுப்பணித் துறையினா் வாடகை அடிப்படையில் வழங்கினா்.
ஆட்சியா் மாளிகை பயன்பாடின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. அக் கட்டடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அக் கட்டடத்தை அகற்றிவிட்டு செயற்பொறியாளா்களுக்காக 10 குடியிருப்புகளைக் கட்ட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

