நாமக்கல் மாவட்ட அளவில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் வருவாய் மாவட்ட அளவில் ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, நீச்சல், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், பீச் வாலிபால், ஸ்குவாஸ், வாள் சண்டை, சைக்கிளிங் போன்ற மாணவா்களுக்கான புதிய வகை விளையாட்டு போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதில் ஜூடோ விளையாட்டுப் போட்டி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், குத்துச்சண்டை பாரதி மேல்நிலைப் பள்ளியிலும், டேக்வாண்டோ எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், செவ்வந்திப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் சைக்கிளிங் போட்டியும், நாமக்கல் விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும் நடைபெறுகிறது.
இதில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவாா்கள் என மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


