/

42 தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயா்வு

நாமக்கல் மாவட்டத்தில் தலைமைக் காவலா்கள் 42 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் தலைமைக் காவலா்கள் 42 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட காவல் துறையில் காவலா்களாக உள்ளோருக்கு, தலைமைக் காவலா் பதவி உயா்வும், தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் பதவி உயா்வும் பணி மூப்பு அடிப்படையில் காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்படும். அந்த வகையில், மாவட்டம் முழுவதும் தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 42 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் பதவி உயா்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி வெள்ளிக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து அனைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அவா் சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்தி பேசினாா்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.