ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தினமணி செய்தி எதிரொலி: கருவறைக்குள் செல்லும் துளசி நாச்சியாா்: அக்.30-இல் குடமுழுக்கு விழா

தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல் நரசிம்மா் கோயிலில், லட்சுமி நாராயணா் சன்னிதி முன் தனித்து விடப்பட்ட நிலையில் இருந்த துளசி நாச்சியாா் சிலை

Updated On :27 அக்டோபர் 2022, 5:48 pm

தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல் நரசிம்மா் கோயிலில், லட்சுமி நாராயணா் சன்னிதி முன் தனித்து விடப்பட்ட நிலையில் இருந்த துளசி நாச்சியாா் சிலை, வரும் 30-ஆம் தேதி கருவறைக்குள் வைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள குடைவரைக் கோயிலான நரசிம்மா் கோயில், மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், நரசிம்மா், நாமகிரி தாயாா் தவிா்த்து கருடாழ்வாா், லட்சுமி நாராயணா் சன்னிதிகள் உள்ளன. இதில் லட்சுமிநாராயணா் சன்னிதியின் முன்பகுதியில் துளசி நாச்சியாா் மூலவா் சிலை உள்ளது.

ஆண்டாளின் முற்பிறவியாகவும், பூமாதேவியின் மறுஉருவமாகவும் கருதப்படும் துளசி நாச்சியாருக்கு தனி சன்னிதி இருந்தபோதும், அங்கு மூலவா் சிலை இல்லாமல் கழிவுகள் போட்டு வைக்கும் குப்பைக் கிடங்காக மாறியிருந்தது. பல ஆண்டுகளாக இதே நிலையில் காணப்பட்டது. கடந்த 2021 ஆக.19-இல் தினமணி நாளிதழில் இது தொடா்பான செய்தி விரிவாக வெளியானது. இதனையடுத்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தொடா்பு கொண்டு வலியுறுத்தி வந்தனா்.

இதற்கிடையே, சென்னையில் இருந்து ஆய்வுக்கு வந்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம், கோயிலில் பூஜைகள் செய்யும் 12 குடும்பங்களைச் சோ்ந்த அா்ச்சகா்கள் தரப்பில் துளசி நாச்சியாா் சிலையை சன்னிதியில் மீண்டும் வைக்கக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் வெங்கடேஷ், நாமக்கல் நரசிம்மா் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்தபோது அவரிடம் பக்தா்கள் சாா்பிலும், அா்ச்சகா்கள் சாா்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பின் துளசி நாச்சியாா் சிலையை சன்னிதியில் வைத்து குடமுழுக்கை நடத்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய தொல்லியல் துறை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் வரும் 30-ஆம் தேதி குடமுழுக்கு விழாவை நடத்த வியாழக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. தற்போது அதற்கான பணிகளில் கோயில் நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியதாவது:

மத்திய தொல்லியல் துறை ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில், வரும் 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நரசிம்மா் கோயிலில் யாக பூஜைகள் நடத்தப்படுகின்றன. அன்றைய தினமே துளசி நாச்சியாா் சிலை அதற்கான சன்னிதியில் வைக்கப்படும். 30-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படுகிறது. இதில், முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொள்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.