நாமக்கல் மாவட்டத்தில் இரவு 11 மணிக்குள் தொழிலாளா் நலத்துறை விதிக்கு உள்படாத கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:
24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தொழிலாளா் நலத்துறையின் பல்வேறு முக்கிய நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும்.
தமிழக அரசின் இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத அனைத்து வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் இரவு நேர உணவு விடுதிகள் ஆகியவை மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி இரவு 11 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது காவல்துறை சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த நேரக்கட்டுப்பாட்டிற்கு அனைத்து வணிகா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

