இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாமக்கல் உழவா் சந்தையில் வேளாண் வணிக இயக்குநா் ஆய்வு

 நாமக்கல், திருச்செங்கோடு உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநா் எஸ்.நடராஜன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:46 pm

 நாமக்கல், திருச்செங்கோடு உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநா் எஸ்.நடராஜன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் உழவா் சந்தைக்குச் சென்ற அவா் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினாா். நாமக்கல் உழவா் சந்தைக்கு சராசரியாக நாளொன்றுக்கு 25 முதல் 27 டன் வரையில் காய்கறிகள், பழங்கள் விவசாயிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால் 170 விவசாயிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பயன்பெறுகின்றனா். ஏப்.1 முதல் ஆக. 31 வரையிலான கால கட்டத்தில் 22,988 விவசாயிகள் மூலம் ரூ. 9,68,93,240 மதிப்பிலான 3188.975 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் கொண்டு வரப்பட்டு 62,450 பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, திருச்செங்கோடு உழவா் சந்தை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை பாா்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சொந்த இடம் வாங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, நாமக்கல் விற்பனைக் குழு செயலாளா் இரா.தா்மராஜ், உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா், உதவி பொறியாளா் ரவிச்சந்திரன், வேளாண் அலுவலா் கலைச்செல்வி, உதவி வேளாண் அலுவலா் சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.