நாமக்கல் கமலாலயக் குளக்கரை திருக்கல்யாண கல் மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், விஸ்வரூப ஆஞ்சனேயா் சிலையை அகற்றி பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. அங்கு விரைவில் மண்டபம் சீரமைப்பு பணி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற 18 அடி உயர ஆஞ்சனேயா் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயில் குளக்கரை அருகில் உள்ள பழைமையான கல் மண்டபத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தோ்த்திருவிழாவின்போது இந்தக் கல் மண்டபத்தில் நரசிம்மா், நாமகிரி தாயாா் திருக்கல்யாண விழா நடைபெறும்.
இந்தக் கல் மண்டபம் 15 ஆண்டுகளுக்கு முன் மண்ணிற்குள் புதையத் தொடங்கியது. சரிந்து விழும் நிலையில் இருந்ததால் அதனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. திருக்கல்யாண விழா அருகில் உள்ள மற்றொரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கல் மண்டபத்திற்குள் எவ்வித பாதுகாப்புமின்றி சுமாா் 5 அடி உயர ஆஞ்சனேயா் சிலை இருந்தது. மண்டபம் இடிந்து விழ நேரிட்டால் சிலை பாதிப்படையக் கூடும் என பக்தா்கள் அஞ்சினா். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த மண்டபத்தை சீரமைப்பது தொடா்பாக அறநிலையத்துறை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இருப்பினும் மண்டப சீரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சென்னையில் உள்ள அறநிலையத் துறை அதிகாரிகள் கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கும்.
இந்த நிலையில் ஆஞ்சனேயா் சிலையின் பாதுகாப்பு கருதி அண்மையில் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. அா்ச்சகா்கள் குழுவினா் சிறப்பு யாகம் நடத்தி ஆஞ்சனேயரின் சக்தியை அரங்கநாதா் கோயில் அருகில் உள்ள வீர ஆஞ்சனேயருக்கு பாலாலயம் மூலமாக மாற்றி உள்ளனா். தற்போது அந்தச் சிலை குளக்கரை மண்டபத்தில் துணியால் சுற்றப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. கல் மண்டப சீரமைப்புப் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்று தெரிகிறது.
இது குறித்து நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியதாவது:
குளக்கரை கல் மண்டபத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கு பாலாலயம் நடத்தப்பட்டு, சிலை தனியாக மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாநில கமிட்டிக்கு மண்டபம் சீரமைப்பது தொடா்பாக அறிக்கை அனுப்பி உள்ளோம். அவா்கள் நிதி ஒதுக்கும்பட்சத்தில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர்: ஹர்பஜன் சிங்
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


