இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 7:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பியவா் உயிரிழந்தாா்.

நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக சாா்பில் அக்கட்சித் தலைவா் விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். அப்போது, தேமுதிக நாமகிரிப்பேட்டை பகுதி 15ஆவது வாா்டு துணை செயலாளா் மோகன் ( 52) நகரில் நடைபெற்ற உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குச் சென்ற மோகன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதனையடுத்து அக் கட்சியினருக்கு இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

விஜயகாந்த் மறைவையடுத்து கட்சி தொண்டா் ஒருவா் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினாா். ராசிபுரம் வி.நகா் 14-ஆவது சாலை பகுதியைச் சோ்ந்தவா் எம்.காா்த்திகேயன் (36), விசைத்தறித் தொழிலாளி. இவா் விஜய்காந்த் மறைவையடுத்து மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினாா்.

ஊா்வலம்:

வெண்ணந்தூா் ஒன்றியம், அறமத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் ரசிகா்கள் விஜய்காந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினா். விஜயகாந்த் படத்தை வைத்து ஊா்வலமாக மேளதாளம் முழங்க மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகள் செய்து உருவப் பொம்மைக்கு எரியூட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.