நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உள்பட்ட வளையப்பட்டி பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 2,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழகத்தினர், ஐந்து கிராம விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 16 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிக்க: சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!
இந்த நிலையில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சிப்காட் எதிர்ப்புக் குழுவினர், விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரளாக நின்று தங்களுடைய நெற்றியில் நாமம் போட்டும், நாமம் போட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய படியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமையில் அனைத்து விவசாயிகளும் சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 % கடன் தள்ளுபடி கோரி ஜூன் 30-இல் உண்ணாவிரதம்: பி.ஆா்.பாண்டியன்
அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!
குதிரை பேரம்: தவெக அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



