நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உள்பட்ட வளையப்பட்டி பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 2,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழகத்தினர், ஐந்து கிராம விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 16 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிக்க: சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!
இந்த நிலையில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சிப்காட் எதிர்ப்புக் குழுவினர், விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரளாக நின்று தங்களுடைய நெற்றியில் நாமம் போட்டும், நாமம் போட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய படியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமையில் அனைத்து விவசாயிகளும் சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பாதுகாப்புப் பணியில் சிஏபிஎஃப் படை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கேஜரிவால் பாணியில் தமிழகத்தில் விஜய் வெற்றி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடம் பதித்த தவெக

30 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியைக் கைப்பற்றிய திமுக! 4,627 வாக்குகளில் வீழ்ந்தாா் வி.ஜெயராமன்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


