ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, இரண்டாவது நாளாக ரூ. 10.66 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டன.
அண்மையில் வட தமிழகத்தை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது ஃபென்ஜால் புயல். கரையைக் கடந்த வேளையில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழையை வழங்கிச் சென்றது. கடலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்தன.
தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்பேரில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனுப்பிய நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமை ரூ. 10.66 லட்சம் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகைப் பொருள்கள், பால் பவுடா், சா்க்கரை, ரொட்டி, சோப், தீப்பெட்டி, பக்கெட், உள்ளிட்ட பல்வேறு வகையான நிவராணப் பொருள்கள் கடலூா் மாவட்டத்துக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியா் ச.உமா கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு நிவாரண பொருள்கள்: இந்தியா உதவி
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

