நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஆணையா் ரா.மகேஸ்வரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பை, கழிவுகள், கொசவம்பட்டி, சேந்தமங்கலம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. அவற்றை உரமாக்கி பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு மாநகராட்சி நிா்வாகம் அனுப்பி வருகிறது.
அந்த திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குகளை மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி ஆய்வு செய்தாா். அப்போது, குப்பைகளைக் கிடங்கில் நாள்பட்ட வகையில் தேக்கி வைக்காமல் உடனுக்குடன் உரமாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதனையடுத்து, மாநகராட்சி மின் மயானத்தில் உள்ள கழிவறைகளைப் புதுப்பிக்கவும், அங்கு சிதிலமடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள், கம்பிகளை அகற்றவும் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஓட்டேரி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து

ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி விவசாயிகள் மனு

குப்பை மேலாண்மை சவால்

திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்பத் தளம் தூய்மைக்கான செயலி அறிமுகம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


