சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாமக்கல், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :12 டிசம்பர் 2024, 8:14 pm

நாமக்கல், சேந்தமங்கலம் ஒன்றியங்களில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் அருகே வீசாணம், சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். ரூ. 13.50 லட்சம் மதிப்பில் வீசாணம் ஜெ.ஜெ.நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்டு குடிநீா் வழங்குவதற்கான இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை, குடிநீா் விநியோகிக்கும் நேரம், சுத்திகரிக்கும் காலமுறை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.

அதன்பிறகு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, மகளிா் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு அறையில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை, உடல் நலம் குறித்து கேட்டறிந்தாா்.

கருவிகளின் பயன்பாடு, தினசரி வரும் நோயாளிகள் விவரம், ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்ட விவரம், பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, மழைக்கால நோய்த்தொற்று சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.