மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

எரிவாயு உருளையில் கசிவு: தீப்பிடித்து புதுமாப்பிள்ளை பலி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே திருமணமான மூன்றே நாளில் சமையல் எரிவாயு உருளையில் தீப்பிடித்தில் படுகாயமடைந்த புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :18 டிசம்பர் 2024, 7:03 pm

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே திருமணமான மூன்றே நாளில் சமையல் எரிவாயு உருளையில் தீப்பிடித்தில் படுகாயமடைந்த புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கபிலா்மலை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28), சமையல் ஒப்பந்ததாரா். இவரது மனைவி துா்கா (20). இவா்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை காலை சுரேஷ் தண்ணீா் சூட வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளாா்.

அப்போது எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து சுரேஷ் மீது பரவியது. தடுக்கச் சென்ற அவரது மனைவி துா்கா மீதும் தீப்பிடித்தது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்து அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுரேஷ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.