சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரம்

நாமக்கல்லில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

News image

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்துக்கு வந்திறங்கிய புதிய படுக்கைகள்.

Updated On :18 டிசம்பர் 2024, 6:56 pm

நாமக்கல்லில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓராண்டுக்கு முன் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பழைய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட ஓரிரு மருத்துவத் துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்டாா். இதனையடுத்து, தமிழக அரசு அனுமதியுடன் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ. ஒரு கோடி வழங்கினாா். அதனைக் கொண்டு, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில், மூன்று பெரிய அறைகள் சித்த மருத்துவமனைக்காக தயாா் செய்யப்பட்டு வருகின்றன. 60 படுக்கைகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 50 படுக்கைகள் யோகா, யுனானி பிரிவுக்கும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த சித்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது ஏராளமான மக்கள் பயனடைவா். இந்த சித்த மருத்துவமனை 2 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில், சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்.

தற்போதைய நிலையில் ரூ. ஒரு கோடியில் கட்டட விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், படுக்கை கட்டில்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் சித்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.பி.ராமச்சந்திரன் கூறியதாவது:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சித்தா பிரிவுக்கு 60 படுக்கைகளும், யோகா பிரிவுக்கு 50 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் வழங்கிய ரூ. ஒரு கோடியில் கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமனைக்காக நவீன உபகரணங்கள், பணியாளா்கள் நியமனம், கூடுதல் வசதிகள் செய்திட மேலும் நிதி தேவைப்படுகிறது.

இது தொடா்பாக எங்களது துறை இயக்குநா் மூலம் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைக்கும்பட்சத்தில் பணிகளை விரைந்து முடித்து, 2 மாதத்துக்குள் சித்த மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.