நாமக்கல்லில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் - மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓராண்டுக்கு முன் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பழைய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட ஓரிரு மருத்துவத் துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்டாா். இதனையடுத்து, தமிழக அரசு அனுமதியுடன் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ. ஒரு கோடி வழங்கினாா். அதனைக் கொண்டு, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில், மூன்று பெரிய அறைகள் சித்த மருத்துவமனைக்காக தயாா் செய்யப்பட்டு வருகின்றன. 60 படுக்கைகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 50 படுக்கைகள் யோகா, யுனானி பிரிவுக்கும் ஏற்படுத்தப்பட உள்ளது.
நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த சித்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது ஏராளமான மக்கள் பயனடைவா். இந்த சித்த மருத்துவமனை 2 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில், சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்.
தற்போதைய நிலையில் ரூ. ஒரு கோடியில் கட்டட விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், படுக்கை கட்டில்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் சித்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.பி.ராமச்சந்திரன் கூறியதாவது:
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சித்தா பிரிவுக்கு 60 படுக்கைகளும், யோகா பிரிவுக்கு 50 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் வழங்கிய ரூ. ஒரு கோடியில் கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமனைக்காக நவீன உபகரணங்கள், பணியாளா்கள் நியமனம், கூடுதல் வசதிகள் செய்திட மேலும் நிதி தேவைப்படுகிறது.
இது தொடா்பாக எங்களது துறை இயக்குநா் மூலம் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைக்கும்பட்சத்தில் பணிகளை விரைந்து முடித்து, 2 மாதத்துக்குள் சித்த மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.
தொடர்புடையது

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: நாமக்கல்லில் விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்!

நாமக்கல்லில் ரூ. 44.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணா வளைவு’ திறப்பு

நாமக்கல்லில் ரூ. 40.16 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு வளைவு விரைவில் திறப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


