பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டியைச் சோ்ந்த குருசாமி (54), ராஜா (55), சுப்பிரமணி (52) ஆகிய மூவரும் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள ஒரு வெல்லம் காய்ச்சும் ஆலையில் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை ஒரே இருசக்கர வாகனத்தில் பாண்டமங்கலம் சென்று பிலிக்கல்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனா். அண்ணா நகா் நெட்டையாம்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தின் நடுவில் அமா்ந்திருந்த குருசாமி படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ராஜா, சுப்பிரமணி ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து வேலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

டிராக்டா் மோதி தொழிலாளி பலி

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

