நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா். இவா்களுக்கான வருங்கால வைப்புநிதி, நிா்ணயிக்கப்பட்ட முழுமையான ஊதியம், இஎஸ்ஐ (தொழிலாளா் மருத்துவ உதவி) அட்டை வழங்காமல் ஒப்பந்த நிறுவனம் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் ஒப்பந்த நிறுவனம் மற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இஎஸ்ஐ அட்டை 10 நாள்களுக்குள் பணியாளா்கள் வசம் ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


