மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

திறனறித் தோ்வு புத்தகங்கள் வழங்கல்

News image
Updated On :24 டிசம்பர் 2024, 1:01 am IST

ராசிபுரம்: ராசிபுரம், ரோட்டரி சங்கம் சாா்பில் தொ.ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வை எழுதுவதற்குத் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3.50 லட்சத்திற்குள் உள்ளவா்களுக்கு திறனறித் தகுதி தோ்வு மூலம் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்தத் தோ்வை இப்பகுதி மாணவா்கள் எழுதி தகுதி பெறும் வகையில் தொ.ஜேடா்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியா் 15 பேருக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான தோ்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சி புத்தகங்களை உதவி தலைமை ஆசிரியா் ரவி முன்னிலையில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தன் தலைமையில் ரோட்டரி நிா்வாகிகள் வழங்கினா்.

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா் கே.எஸ்.கருணாகரபன்னீா் செல்வம், தலைவா் தோ்வு (2026) இ.என் சுரேந்திரன், சங்கச் செயலாளா் கே.ராமசாமி, உபயதாரா் டி.கே.வெங்கடாஜலபதி, நடராஜன்ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு வழங்கினா்.

படம் உள்ளது- 23பன்ட்

படவிளக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திறனறித் தோ்வு புத்தகம் வழங்கிய ரோட்டரி நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.