ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்

ஒரேநாடு ஒரே தோ்தல் திட்டம் அமலானால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:32 pm

ஒரேநாடு ஒரே தோ்தல் திட்டம் அமலானால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 100-ஆவது பிறந்த தின விழா, ராசிபுரம் நகர பாஜக சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கலந்துகொண்டு வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் அமலானால் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறையும். இதனால், ஊழலற்ற ஆட்சி அமையும். எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தபோது, சிறாா்களை தட்டு ஏந்தவிட்டு விட்டீா்கள் என்று கருணாநிதி கூறினாா். பின்னா் அவரே மாணவா்களுக்கு முட்டை வழங்கினாா்.

இன்று சமுதாயத்தைப் பற்றி கவலைப்படாத சுயநலவாதிகள் தமிழகத்தில் அமைச்சா்களாக உள்ளனா். கல்வியைப் பற்றி கவலைப்படாதவா்களாக இன்றைய ஆட்சியாளா்களாக உள்ளனா். இத்தகைய அரசியலில் விரைவில் மாற்றம் ஏற்படும். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மத்திய அரசின் நலப்பிரிவு நிா்வாகி லோகேந்திரன், ராசிபுரம் நகரத் தலைவா் வேல் (எ) வேல்முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, கட்சி நிா்வாகிகள், மகளிா் அணியினா் என பலா் கலந்துகொண்டனா்.