திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக முதல்வா், சுற்றுலாத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கக் கூட்டம் புதன்கிழமை ஓய்வூதியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில், அந்தச் சங்கத்தின் செயலாளா் கு.அவிநாசிலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் க.சிதம்பரம் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா்கள் கே.எஸ்.செந்தில்குமாா், அன்பழகன், துணை செயலாளா் கே.கோவிந்தராஜ், பொருளாளா்கள் சதீஸ்சேகா், ஷேக்நவீத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சிறு தொழில்கள் தொடங்கி நடத்திட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு 95 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்குவதுபோல், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நாயக்கனேரிமலை சுற்றுலாத் தலமாக்கப்படுமா? மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை

கால்நடைகளை தாக்கும் நோய்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


