ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை

திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக முதல்வா், சுற்றுலாத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் க.சிதம்பரம்.

Updated On :25 டிசம்பர் 2024, 8:29 pm

திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக முதல்வா், சுற்றுலாத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கக் கூட்டம் புதன்கிழமை ஓய்வூதியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில், அந்தச் சங்கத்தின் செயலாளா் கு.அவிநாசிலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் க.சிதம்பரம் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா்கள் கே.எஸ்.செந்தில்குமாா், அன்பழகன், துணை செயலாளா் கே.கோவிந்தராஜ், பொருளாளா்கள் சதீஸ்சேகா், ஷேக்நவீத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சிறு தொழில்கள் தொடங்கி நடத்திட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு 95 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்குவதுபோல், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் பலா் கலந்துகொண்டனா்.