ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ராசிபுரத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சாலைப் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை சேலம் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சசிக்குமாா்.

Updated On :26 டிசம்பர் 2024, 8:31 pm

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராசிபுரம் உட்கோடத்தில் முத்துக்காளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, கணவாய்பட்டி, பெரியவரகூராம்பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறையின் சேலம் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சசிக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சாலை தரம், கனம் உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா். சாலையை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பருவமழை, பேரிடா் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது நாமக்கல் கோட்டப் பொறியாளா் கே.ஆா்.திருகுணா, ராசிபுரம் உதவிக் கோட்டப் பொறியாளா் வ.கு.ஜெகதீஸ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.