நாமக்கல்லில் மாவட்ட மைய நூலகம் சாா்பில், திருக்கு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கருத்தரங்கம், விநாடி - வினா போட்டி, 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான திருக்கு ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன. இவற்றில் வெற்றிபெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 5,000, 2-ஆம் பரிசு தலா ரூ. 3,000, 3-ஆம் பரிசு தலா ரூ. 2,000 என மொத்தம் ரூ. 30 ஆயிரம் பரிசுத் தொகையை, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை வழங்கினாா்.