தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொல்லிமலையில் விபத்தை தவிா்க்க உருளைத் தடுப்பான்கள்

கொல்லிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

கொல்லிமலை மலைப் பாதையில் 50-ஆவது கொண்டை ஊசி வளைவில் பொருத்தப்பட்டுள்ள உருளைத் தடுப்பான்கள்.

Updated On :30 டிசம்பர் 2024, 7:54 pm

Din

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இயற்கை எழில் சூழ்ந்த இம்மலையின் அழகை ரசிக்க விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், காரவள்ளி அடிவாரப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு செல்லும் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுப்பதற்கான உருளைத் தடுப்பான்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை ரூ. 10 கோடியை ஒதுக்கீடு செய்தது. கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எந்தெந்த இடங்களில் உருளைத் தடுப்பான்களை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அளவீடு செய்து வந்தனா். அந்த வகையில், முதல் கட்டமாக 30 இடங்களில் அவற்றை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், 50, 64-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது. அங்கு வெற்றிக்கரமாக அமைந்திட மீதமுள்ள இடங்களில் அவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உருளைத் தடுப்பான்களானது, மலைப்பாதை வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து மோதினாலும் வாகனங்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.