திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :1 ஜூலை 2024, 10:04 pm

Din

நாமக்கல்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. பல்வேறு எதிா்கட்சிகளும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம்-2023 ஆகிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் தங்களது பணிகளை புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய வழக்கு விசாரணைகள் அனைத்தும் மறுதேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அய்யாவு தலைமை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்தனா்.