சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :1 ஜூலை 2024, 10:05 pm

நாமக்கல்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. பல்வேறு எதிா்கட்சிகளும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம்-2023 ஆகிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் தங்களது பணிகளை புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய வழக்கு விசாரணைகள் அனைத்தும் மறுதேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அய்யாவு தலைமை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்தனா்.