சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

‘தமிழ்நாடு நாள்’ பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டத்தில், மாணவா்கள் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஜூலை 2024, 8:44 pm

Din

நாமக்கல்: ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாணவா்கள் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாட வேண்டும் எனவு தமிழக முதல்வா் 2021 அக்டோபா் 30இல் தெரிவித்தாா்.

மாவட்ட அளவில் அனைத்து அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கிடையே கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஜூலை 9-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகளுக்கு ஆட்சிமொழி தமிழ் என்ற தலைப்பும், பேச்சுப்போட்டிக்கு, குமரி தந்தை மாா்சல் நேசமணி, தென்னாட்டு பொ்னாட்ஷா அண்ணா, கலைஞா் கருணாநிதி ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000 வழங்கப்படும். இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா்கள் சென்னையில் மாநில அளவில் ஜூலை 12-இல் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.