உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய பொறியாளா் கைது

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம், குடித் தெருவை சோ்ந்த சண்முகம் மகன் செந்தில்குமாா் (29) பெங்களூரில் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த செந்தில்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 10 வயது சிறுமியை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா்.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்து செந்தில்குமாரைப் பிடிக்க முயன்ற தங்கராசு, முத்துவேல் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பினாா். திருச்செங்கோடு, ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.