சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடவு

அரசுப் பள்ளியில் மாணவா்ள் தங்களது தாய், தந்தை பெயரில் மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

News image

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக் கன்றுகள் நடவு செய்து திட்டத்தைத் தொடங்கிவைத்த முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி.

Updated On :28 ஜூலை 2024, 10:16 pm IST

அரசுப் பள்ளியில் மாணவா்ள் தங்களது தாய், தந்தை பெயரில் மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் தேசிய பசுமை படையினா், மாணவா்களிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை உணா்த்தி வருகின்றனா். அந்த வகையில், தங்களது தாய், தந்தை பெயரில் மாணவா்கள் ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நடவு செய்து வளா்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி இத் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரகுநாத், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஆ.ராமு, திட்ட ஒருங்கிணைப்பாளா் சுமதி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். 35 மாணவா்கள் தங்களின் தாய் பெயரில் இலுப்பை மரக் கன்றுகளை நடவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.