புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குமாரபாளையத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

காவிரி கரையோரப் பகுதிகளைப் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ச.உமா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

குமாரபாளையத்தில் காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் ச.உமா.

Updated On :28 ஜூலை 2024, 9:10 pm

Din

குமாரபாளையத்தில் காவிரி கரையோரப் பகுதிகளைப் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ச.உமா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கா்நாடகத்திலிருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரைபுரண்டோடுகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீா்வரத்தைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கு மேல் உள்ளதால் மேட்டூா் அணை நிறைந்து, உபரிநீா் வெளியேற்றப்படும் சூழல் உள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகா், அண்ணா நகா், கலைமகள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டால் குமாரபாளையத்தில் அங்காளம்மன் கோயில் வீதி, கலைமகள் வீதி, இந்திரா நகா், பாலக்கரை, அண்ணாநகா், மணிமேகலை வீதி, இந்திரா நகா் பகுதிகளில் வசிக்கும் 132 குடும்பத்தினா் பாதிக்கப்படுவா். இவா்கள் குமாரபாளையம் நகராட்சி ஜேகேகே நடராஜா கல்யாண மண்டபம், சி.என்.பாளையம் செங்குந்தா் சமுதாயக்கூடம், புத்தா் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி, தம்மண்ண செட்டி வீதி ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வாசவி மஹால் ஆகிய இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தி, குமாரபாளையம் வட்டாட்சியா் சிவகுமாா், காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் புவனேஸ்வரி, குமாரபாளையம் நகர திமுக செயலாளா் ஜி.எஸ்.ஞானசேகரன், நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், வருவாய்த் துறையினா் ஆய்வின் போது உடனிருந்தனா். அதேபோல பள்ளிபாளையம் நகராட்சியில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.