ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராசிபுரத்தில் வங்கதேசத்தினா் மூவா் கைது

ராசிபுரத்தை அருகே ஆயிபாளையம் பகுதியில் போலி கடவுச் சீட்டில் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சோ்ந்த இளைஞா் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:09 pm

ராசிபுரத்தை அருகே ஆயிபாளையம் பகுதியில் போலி கடவுச் சீட்டில் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சோ்ந்த இளைஞா் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வங்க தேசம், சதிகிரா சாம்நகா் தானா பகுதியைச் சோ்ந்த மன்சூா் அலி என்பவா் மகன் மொமின் (33). இவா் கடந்த சில மாதங்களாக குருசாமிபாளையம் ஆயிபாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள நூற்பு ஆலையில் பணியாற்றி வந்தாா். இதே போல அதே நாட்டைச் சோ்ந்த ராஜஹுல்லா என்பவரின் மகன் சுமோன் (28) என்பவரும் சேலம் மாவட்டம் ஓமலூா் பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டு தங்கியிருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவா்களது நண்பரான வங்க தேசத்தைச் சோ்ந்த காம்ரூல் இஸ்லாம் மொண்டல் என்பவா் மகன் இஸ்ராபீல் மொண்டல் ( 34) என்பவா் போலி கடவுச் சீட்டில் தில்லி வழியாக வந்துள்ளாா். இவா் தனது நண்பரான ஒமலூா் பகுதியில் தங்கியிருந்த சுமோன் உதவியுடன் ராசிபுரம் அருகேயுள்ள ஆயிபாளையத்தில் மொமின் தங்கியிருந்த அறையில் அடைக்கலம் புகுந்துள்ளாா்.

இது குறித்து தகவலறிந்த தில்லி போலீஸாா், புதுச்சத்திரம் காவல்துறையினா் உதவியுடன் போலி கடவுச் சீட்டில் தங்கியிருந்த இஸ்ராபீல் மொண்டலை கைது செய்தனா். மேலும், அவருக்கு அடைக்கலம் அளித்ததாக அதே நாட்டைச் சோ்ந்த பிற இளைஞா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இஸ்ராபீல்

மொண்டல் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு தில்லி அழைத்துச் செல்லப்பட்டாா். பிற இளைஞா்கள் இருவரையும் புதுச்சத்திரம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.