ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வங்கி பெயரில் போலியாக ஆவணங்களை தயாா் செய்து ஏமாற்றியதாக இருவா் கைது

பரமத்தி வேலூா் பகுதியில் வங்கி பெயரில் போலியான ஆவணங்களை தயாா் செய்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த இருவரை வங்கி அதிகாரிகள் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:07 pm

பரமத்தி வேலூா் பகுதியில் வங்கி பெயரில் போலியான ஆவணங்களை தயாா் செய்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த இருவரை வங்கி அதிகாரிகள் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையத்தில் உள்ள ஒரு வங்கியின் முதுநிலை மேலாளா் வினோத்குமாா் (36) வேலூா் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

நல்லிபாளையத்தில் உள்ள எங்கள் வங்கியின் பெயரில் போலியான முத்திரைகளை தயாா் செய்து பொதுமக்களை ஏமாற்றி சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு பரமத்தி வேலூா் வட்டம், கள்ளிப்பாளையம், மீனாட்சிபாளையம், கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தலா ரூ. 1,000 வரை வசூலித்துள்ளனா்.

இதுகுறித்து எங்கள் வங்கிக்கு தகவல் கிடைத்ததன் பேரில் முதுநிலை மேலாளராகிய நான் ( வினோத்குமாா்), வங்கி ஊழியா் சுரேஷ்குமாா் ஆகியோா் கள்ளிப்பாளையத்திற்கு சென்றபோது அங்கு இருவா் வங்கியின் போலியான சேமிப்புக் கணக்கு படிவம், நல்லிபாளையம் வங்கி கிளையின் போலியான முத்திரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபா்களைப் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.

அவா்களிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் அவா்கள் சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (36), சேலம், ஜான்சன்பேட்டையைச் சோ்ந்த பிச்சைமுத்து (26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் வைத்திருந்த சேமிப்புக் கணக்கு படிவம், போலி முத்திரை, ரூ. 2, 500 ரொக்கம், இரண்டு கைப்பேசிகள், இரு சக்கர வாகனத்தை காவல்துறையினா் கைப்பற்றி, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.